
எனது முந்தைய பதிவொன்றில் திருலோக சீதாராம் அவர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். கவிஞர் மற்றும் எழுத்தாளரான திருலோக சீதாராம் குறித்து கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள் இலக்கியச் சிந்தனை கூட்டமொன்றில் பேசியதன் மூலமே அவரைப் பற்றி அறிந்தேன். அவரின் எண்ணங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவரின் எண்ணங்களை அறிய விரும்புவோர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இலக்கியப்படகு’ என்ற நூலை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். திருலோக சீதாராம் அவர்கள் குறித்த கட்டுரையை ‘திரிசக்தி’ தீபாவளி மலரில் எழுதியுள்ளேன். ஸ்ரீரங்கம் மோகனரங்கன் திருலோக சீதாராமைப் பற்றிப் பேசவில்லை என்றால், எனக்கு அவரைப் பற்றித் தெரிய வந்திருக்காது. அவருக்கு இந்நேரத்தில் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமலரில் திரிசக்தி தீபாவளி மலர் குறித்த பார்வையும் இடம் பெற்றுள்ளது. அப்பார்வையில் என் கட்டுரை குறித்த பார்வையும் இடம் பெற்றுள்ளதால், அதை மட்டும் இங்கு தந்துள்ளேன். திருலோக சீதாராம் அவர்களின் புகைப்படம் நெட்டில் ஒரே ஒரு வலைத்தளத்தில் மட்டுமே இருந்தது.

அவர் புகைப்படத்துக்குக் காட்டிய ஆர்வத்தை ஸ்ரீரங்கம் மோகனரங்கன் புகைப்படத்துக்குக் காட்டத் தவறிவிட்டேன். அவர் என்னை மன்னிப்பாராக. அவரின் புகைப்படத்தையும் ஒரு வலைத்தளத்திலிருந்துதான் இங்கு எடுத்துத் தந்துள்ளேன்.