Thursday, November 11, 2010
சென்னை சைதை செங்குந்தகோட்ட சிவசுப்ரமண்யசாமி கோயிலின் சூரசம்ஹார வைபவம் / 11.11.2010
இன்று சென்னை சைதை செங்குந்த கோட்டம் சிவசுப்ரமண்ய சுவாமி கோயிலின் சார்பாக நடைபெற்ற சூரசம்ஹார வைபவத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்காக. முதல் மூன்று புகைப்படங்கள் தேவ அசுர போராட்டத்தைக் காணக் காத்திருக்கும் (முருகன் மற்றும் சூரன் வருகைக்காகக் காத்திருக்கும்) பக்த வெள்ளம். அதன்பின் சூரன் வருகை, முருகன் வீரபாகை தூது விடுதல், அதன்பின் படிப்படியாக சூர வதம், முடிவில் கற்பூர ஆரத்தி என என்னால் இயன்றதை, என் கையடக்க கேமராவில் க்ளிக்கியதை, காணாதவர்கள் கண்டுகளிப்பதற்காக இங்கே தந்திருக்கிறேன்.























Monday, May 10, 2010
அமுதசுரபி மே 2010 / உதவி தேவை
அன்புள்ள நண்பர்களுக்கு...
அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.
அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.
Monday, April 19, 2010
உதவுங்கள் பூச்செண்டாக...
முத்துராமன். 33 வயது இளைஞர். நல்ல எழுத்தாளர், சிறுகதையாளர். பழகுவதற்கு வெகு இனிமையானவர். மனித நேயம் மிக்கவர். தமிழின் பிரபல முன்னணி எழுத்தாளர்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் இவருக்கு உண்டு.
இவரது சிறுகதைகள் கல்கி, குமுதம் ஜங்ஷன் உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும், தமிழ்சிஃபி, சமாச்சார், தமிழோவியம் உள்ளிட்ட சில இணைய தளங்களிலும் வெளியாகியிருக்கின்றன. வெகுஜன பத்திரிகைகள் பலவற்றில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
‘சதுரங்கச் சிப்பாய்கள்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. அந்நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன, ‘இவரது சிறுகதைகளின் தொனி அடக்கமானது. புனைகதையில் அடக்கம், இன்னும் இந்தியரிடையே பழக்கப்படவில்லை. முத்துராமன் இந்தியப் புனைகதையில் அடக்கமான தொனி நிலைபெற ஒரு காரணமாயிருப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சிரிப்பு டாக்டர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். பகத் சிங்கின் வரலாறைச் சொல்லும் ‘துப்பாக்கி விடு தூது’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
முத்துராமன் தற்போது சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் தற்போது தாற்காலிகமாக ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை எடுத்து வருகிறார். இவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் நான்கு லட்சத்துக்கும் மேல் தேவைப்படுகிறது.
கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரியும் நண்பர் முகிலும், இந்த விவரத்தை அவரின் இணையதளத்தில் உதவி கேட்டு வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள அந்த இணைப்புகளின் விவரம்...
உதவி தேவை
நன்றி
எழுத்துலக நண்பர்களும் வாசகர்களும், தங்களால் இயன்ற உதவியை அவருக்குச் செய்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ‘சிரிப்பு டாக்டர்’ எழுதிய அந்தக் கலைஞனின் வாழ்விலும் புன்னகைப் பூக்கள் மலரட்டும். நம் உதவியானது ஒரு பூச்செண்டாக மாறி, அவரின் வாழ்வைப் பூத்துக் குலுங்கச் செய்யட்டும்.
அன்புடன்,
சைதை முரளி.
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
இவரது சிறுகதைகள் கல்கி, குமுதம் ஜங்ஷன் உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும், தமிழ்சிஃபி, சமாச்சார், தமிழோவியம் உள்ளிட்ட சில இணைய தளங்களிலும் வெளியாகியிருக்கின்றன. வெகுஜன பத்திரிகைகள் பலவற்றில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
‘சதுரங்கச் சிப்பாய்கள்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. அந்நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன, ‘இவரது சிறுகதைகளின் தொனி அடக்கமானது. புனைகதையில் அடக்கம், இன்னும் இந்தியரிடையே பழக்கப்படவில்லை. முத்துராமன் இந்தியப் புனைகதையில் அடக்கமான தொனி நிலைபெற ஒரு காரணமாயிருப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சிரிப்பு டாக்டர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். பகத் சிங்கின் வரலாறைச் சொல்லும் ‘துப்பாக்கி விடு தூது’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.
முத்துராமன் தற்போது சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் தற்போது தாற்காலிகமாக ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை எடுத்து வருகிறார். இவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் நான்கு லட்சத்துக்கும் மேல் தேவைப்படுகிறது.
கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரியும் நண்பர் முகிலும், இந்த விவரத்தை அவரின் இணையதளத்தில் உதவி கேட்டு வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள அந்த இணைப்புகளின் விவரம்...
உதவி தேவை
நன்றி
எழுத்துலக நண்பர்களும் வாசகர்களும், தங்களால் இயன்ற உதவியை அவருக்குச் செய்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ‘சிரிப்பு டாக்டர்’ எழுதிய அந்தக் கலைஞனின் வாழ்விலும் புன்னகைப் பூக்கள் மலரட்டும். நம் உதவியானது ஒரு பூச்செண்டாக மாறி, அவரின் வாழ்வைப் பூத்துக் குலுங்கச் செய்யட்டும்.
அன்புடன்,
சைதை முரளி.
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
Subscribe to:
Posts (Atom)
About Me

- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.