Tuesday, January 30, 2007
ஹே ராம்
'ஹே ராம், ஹே ராம், ஹே ராம்!' என்று கூறியவாறே இன்று காந்திஜி தன் இன்னுயிரை
நீத்த தினம்.
'உண்மைக்காக எதை வேண்டுமானாலும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் ஒருபோதும் உண்மையைத் துறக்கக் கூடாது' என்று கூறி அவ்விதமே வாழ்ந்தவர் மகாத்மா.
'செய் அல்லது செத்துமடி!' என்ற வீரவசனத்துக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.
நினைவு தினத்திலும் பிறந்த தினத்திலும் மட்டுமல்ல, எந்நாளுமே நினைக்கும் அளவுக்கு பிறருக்காக வாழ்ந்தவர்.
இந்தப் புத்தாண்டின் வாழ்த்தாக, எழுத்தாளர்கள் சுபா எனக்கு(ம்) அனுப்பிய காந்திஜி ஓவியத்தைத் தாங்களும் கண்டு மகிழ இங்கு தந்துள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- சைதை முரளி
- பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
2 comments:
காந்தி ஓவியம் அருமை முரளி. எழுத்தாளர்கள் சுபா எப்போதுமே புதுமையாய் சிந்திப்பவர்கள்..எனக்கும் அனுப்பி இருக்கிறார்கள். அதை இப்படி வலையில் பதிக்க எனக்குத்தோன்றவில்லை..நீங்கள்அண்ணலின்
நினைவுதினத்தில் பதிவு செய்தது சிறப்பு.(தாமதமாய் பார்க்க நேர்ந்து தாமதமாய் மடல் இடுகிறேன் மன்னிக்க)
ஷைலஜா
நன்றி ஷைலஜா.
Post a Comment